Friday, September 10, 2021

 எரிந்த கோபுரங்கள்

     9/11  
- பி. கிருஷ்ணமூர்த்தி 



இரட்டை பிறவிகள் அல்ல நாங்கள்
  இருவராக படைக்கப்பட்டோம் நியுயார்க் நகரில்
உலகமே வியக்கும்படி
உயரமாக வாழ்ந்திருந்தோம்  
     
 இரட்டை கோபுரங்கள்  என்றாலும
    இறைவன் கோவில் கோபுரங்கள் அல்ல 
இரவும் பகலும் எங்களுக்கு உறவு
இணை பிரியாது வாழ்ந்து வந்தோம

எங்களுக்குள் நூற்றி பத்து மாடிகள் உண்டு
ஏராளமாக அங்கு பணியாளர்களும் உண்டு
எங்களை தரசித்த பக்தர்கள் எண்ணில் அடங்கா
எங்களை காணாதவரோ விரல்களில் அடங்குவர் 

அமெரிக்காவின் தலைவாசலில் காவலிருந்தோம
அடுத்திருந்த கட்டிடங்கள் எங்களுக்கு இளையவர்கள்
ஆறெழுத்தில் அடங்கும் அட்லான்டிக் சமுத்திரம்
அடிவாரத்தின் அருகாமையில் சலசலத்திருக்கும்

செப்டம்பர் பதினொன்று செவ்வாய்கிழமை
செங்கதிர் சூரியன் என் றும் போல் உதிக்க
நிர்மாலய நீலவானம் எங்கும் பரந்திருக்க
நீல பறவைகளும் எங்களை சுற்றி பறந்ததம்மா

காலையிருந்தே அன்றும் கூட்டம்
காண வந்தோரும் பணியாளரும் பல ஆயிரங்கள்..
என்றும்போல் அன்றும்  எங்களிடம் வந்திருக்
ஏனோ எங்களுக்குள் சஞ்சலித்தின் எதிரொலி

ஒன்பதை தொட திணரும் கடிகார முள்
ஓடிகளைத்த நிலை போலும்
படைத்தவன் பார்வை கூட மறைக்கபட்டதோ
பாவிகள் எங்களை அழித்த வேளையில்

உலகே காணாத கொடூர முறையில்
வெள்ளி நிறத்திலே வாயு வேகத்திலே
விமானங்களில் எங்களை தாக்கி எரித்ததில்
வெந்துபோய் மடிந்தவர் ஏராளம் ஏராளம்

அடைக்கலம் தரும் அமெரிக்காவிற்கா இந்த சோதனை
அதிர்ச்சியில் அழுது உறைந்தது உலகம்  
ஒரு கணத்தில் பாவிகள் முடித்த நாச வேலைக்கு
ஒரு வார்த்தை தலைப்பு தீவிரவாதம்

No comments:

Post a Comment